சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்து நோயாளி பலியான பரிதாபம்..

கோவை ;  ஈரோடு மாவட்டம் .பி.பி. அக்ரஹாரம் பாளையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 68 )இவர் உடல்நல குறைவால் கடந்த 22ஆம் தேதி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.25 ஆம் தேதி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள கழிவறைக்கு சென்ற போது திடிரென்று வழுக்கி விழுந்தார் . இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து அவரது மகன் வீரக்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.