நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது வழக்குபதிவு..!

கோவை : நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளராக பதவி வகிப்பவர் இடும்பவன் கார்த்திக். இவர் நேற்று உக்கடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையிலும் பேசினாராம். இது குறித்து உக்கடம் போலீ சில் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி புகார் செய்தார். போலீசார் இடும்பவன் கார்த்திக் மீது 2 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.