அப்பல்லோ மருத்துவமனை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு…

அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் கொரோனா பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதில், கேரளா, மகாராஷ்டிராவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரித்து தொடங்கியுள்ளது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் தற்போது 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பு மீண்டு 8 பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.