சிங்காநல்லூர் எலக்ட்ரிக்கல் கடையில் தீப்பிடித்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் – 2.70 லட்சம் பணம் தீயில் கருகியது ..!

கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு இ.எஸ்.ஐ.மருத்துவமனை எதிர்புறம் எலக்ட்ரிக்கல்- ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவர் கவுசிக் ஆனந்த் ( வயது 42)இவரது கடையில் நேற்று வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது “எலக்ட்ரிக் ஸ்பார்க்” ஆகி பெயிண்டில் பட்டது. இதனால் தீப்பிடித்தது கடை முழுவதும் எரிந்து நாசமானது . இதில் ரூ25 லட்சம் மதிப்புள்ள பெயிண்ட் மற்றும் இதர பொருள்கள் எரிந்து நாசமானது. கல்லாபெட்டியில் இருந்த ரூ .2 லட்சத்து 70 ஆயிரம் பணமும் தீயில் கருகியது. இது பற்றி தீயணைப்புபடையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இது குறித்து கடை உரிமையாளர் கவுசிக் ஆனந்த் சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.