கோவை டாஸ்மாக் கடையில் தூய்மை பணியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது..!

கோவை வெரைட்டிஹால் ரோடு, சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58) துய்மை பணியாளர். இவர் நேற்று செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானாவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் .ராமசாமி கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி ராமசாமியிடமிருந்த 200 ரூபாயை பறித்துக் கொண்டார் .இது குறித்து ராமசாமி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பணம் பறித்த பூசாரி பாளையம் ,சக்தி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் ( வயது 31) என்பவரை கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.