வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது . இப்பயிற்சியில் மாணவர்களிடம் பெற்றோர்கள் எவ்வாறு புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எடுத்துக்கூறி ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது 10 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன், முன்னால் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை ந.கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னிலை வகித்தனர். வால்பாறை ஆசிரியர் பயிற்றுனர் நடத்திய இந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..