பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாப பலி..

கோவை வால்பாறை முடிஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(31). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று கோவை சத்தி ரோடு கணபதி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் வெங்கடேஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக கோவை கிழக்கு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.