காலிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்.!!

லண்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி கரண்வீர் சிங் என்பவருக்கு சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஞ்சாபை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்து காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சா எனப்படும் காலிஸ்தான் அமைப்பினைச் சேர்ந்த பயங்கரவாதி கரன்வீர் சிங் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளதால், அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி தேடி வருகிறது. இவர்  பாகிஸ்தானில் பதுங்கி இருக்கலாம் என அரியானா மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.