கோவை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குபதிவு..!

கோவையில் நேற்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. தேர்தல்  திடலில், ஊர்வலம் நிறைவடைந்தது அப்போது அங்கு ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் கையில் தடியுடன் சிலம்பம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் ஆர்.எஸ்.எஸ் கோவை மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட இணைச்செயலாளர் குமார், ஆர்.எஸ்.எஸ். மக்கள் தொடர்பு அதிகாரி விஜயகுமார், மாநகர செயலாளர் முருகன் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.