14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு – 6 பேர் அதிரடி பணியிடமாற்றம்..!

கோவை: தமிழ்நாடு அரசு நேற்று பிறப்பித்த உத்தரவின் மூலம் 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள்,போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றனர். அதன்படி நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த மோகன் நவாஸ் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு 64 டிஎஸ்பிகளும் கூடுதல் எஸ்.பி.களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும் 6 போலீஸ் சூப்பரண்டுகள் மாற்றப்பட்டுள்ளனர்.