கோவையில் கேட்பாரற்று கிடந்த 78 வாகனங்கள் மீட்பு..!

கோவை தியாகி குமரன் வீதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் அருகே மாநகராட்சி பார்க்கிங் உள்ளது. இங்கு 74 இருசக்கர வாகனங்களும் 4 ஆட்டோக்களும் பல நாட்களாக கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லதா சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் சென்று அந்த வாகனங்களை கைப்பற்றினார்கள். இந்த வாகனங்கள் திருட்டு வாகனங்களா? அல்லது நிறுத்திவிட்டு யாராவது எடுக்காமல் சென்று விட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது..