ஆர்.எஸ்.எஸ் வகுப்பு சென்ற மாணவர்கள் மீது தாக்குதல்: பாஜக, இந்து அமைப்புனர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பரபரப்பு வீடியோ..!

கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வந்தார். அவர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க, இந்து முன்னணி உள்பட இந்து அமைப்பு நிர்வாகிகள் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்து அமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அமைப்பினர்