கோவை மத்திய சிறையில் போக்ஸோ கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் போக்ஸோ கைதி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (44). கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி, போக்ஸோ வழக்கில் பவானி அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர்.

பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்த குருசாமிக்குதிடீரென இன்றுஉடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை சிறைத்துறை காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.