மருத்துவ மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு: ஐ.டி பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது

மருத்துவ மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு: ஐ.டி பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது

கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா ஐ.டி பெண் ஊழியர். இவரது உறவுக்கார பெண் ஒருவர் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து கௌசல்யா தனது உறவுக்கார பெண்ணை பழிவாங்க திட்டமிட்டார். இதை அடுத்து உறவுக்கார பெண்ணின் நண்பரான தொண்டாமுத்தரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். பாலகிருஷ்ணன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை எடுத்து கௌசல்யாவிற்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி வைத்தார். அந்த புகைப்படத்தை பெற்றுக் கொண்ட கவுசல்யா அதனை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உறவினர்களுடன் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கௌசல்யா, பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.