கஞ்சா விற்ற கோவை வாலிபர்கள் கைது..!

கோவை பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையம் பூங்கா நகரில் உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்த 2 வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) மற்றும் அருண்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.