கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றம்..!

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவின்பேரில், மாநகராட்சிப் பகுதியில் அனுதியின்றி, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட காந்திபுரம் லாஜாபதிராய் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாகைகளை கோவை மத்திய மண்டலத்தின் உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் மற்றும் நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.