வீட்டில் பாம்பு கடித்து மூதாட்டி பலி..

கோவை பேரூர் பக்கம் உள்ள குப்பனூர், பள்ளிக்கூட விதியை சேர்ந்தவர் சின்னச்சாமி அவரது மனைவி பூவாத்தாள் ( வயது 78 )இவர் நேற்று அவரது வீட்டின் முன் சாப்பிட்ட பிளேட்டை கழுவிக் கொண்டிருந்தார் .அப்போது இவரது காலில் பாம்பு கடித்தது உடனே அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் .வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்த அவர் மகன் தர்மராஜ் பேரூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.