மாயமான முதியவர் ஆற்றில் பிணமாக மீட்பு – போலீசார் விசாரணை..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கம் உள்ள கோணவாக்கரையைச் சேர்ந்தவர் தன்ராஜ் என்ற அவிநாசி ( வயது 61)இவர் கடந்த 1-12-2022 அன்று பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையம் ,விவேகானந்தா புரத்தில் வசிக்கும் தனது மகன் சுரேஷ் வீட்டுக்கு சென்றிருந்தார். 10 – 12 – 2022 அன்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார்.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிறுமுகை அருகே உள்ள எலகம் பாளையம், பவானி ஆற்றில் அவர் நேற்று ‘பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிறுமுகை போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.