இப்போ நான் கர்ப்பமா இருக்கேன்.. திருந்தி வாழும் என்னை போலீசார் தேட வேண்டாம்- கோவை தமன்னா பதிவு..!

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் (வயது 25) கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .இவர் கடந்த 20 21 ஆம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் (வயது 28) என்பவரை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதற்கு பழி வாங்க கோகுல் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது . இந்த விவகாரத்தில் குரங்கு ஸ்ரீ ராமின் கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரத்தினபுரியில் வசித்து வந்த தமன்னா என்ற வினோதினி என்பவர் குறித்த தகவல் கிடைத்தது. இவர் பீளமேடு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் கஞ்சா வியாபாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். சிறைக்கு சென்று ஜாமினில் வந்த தமன்னா சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் இருக்கும் வீடியோக்கள் வெளியிட்டார். மேலும் அவர் போத்தூரை சேர்ந்த ரவுடி விக்கு சண்முகம் என்பவருக்கு ஆதரவாக “விக்குண்ணா பேன்ஸ்’ என்ற பெயரில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். .எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது .இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் 2 ஆண்டிற்கு முன்புதான்” ட்ரெண்ட்” ஆகும் நோக்கத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டேன். அதன் பிறகு போலீசார் என்னை கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.சிறைக்குச் சென்று வெளியே வந்த பிறகு நான் ஆட்சேபகரமான வீடியோக்களையும் வெளியிடவில்லை .ஆனால் போலீசார் என்னை தேடுகிறார்கள். என் நண்பர்கள் சிலரை போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்து விட மறுக்கிறார்கள். நான் எங்கே இருக்கிறேன்? நான் வந்தால் தான் விடுவோம் என்று போலீசார் சொல்வதாக தெரிகிறது. நான் இப்போது திருமணம் செய்து என் கணவருடன் வாழ்க்கை நடத்தி வருகிறேன். 6 மாத கர்ப்பமாக இருக்கிறேன். எந்த வீடியோவும் நான் போடவில்லை வீடியோ போட்ட போது என் தலை முடியை வெட்டி இருந்தேன். இந்த வீடியோக்களை பார்த்தால் தெரியும் . திருந்தி வாழும் நிலையில் போலீசார் என்னை தேட வேண்டாம். என்று கூறியுள்ளார் தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது…