ஓடும் பஸ்சில் பள்ளி ஆசிரியையிடம் தாலிச் செயின் பறிப்பு..!

கோவை அருகே உள்ள வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் அவரது மனைவி கல்பனா ( வயது 52)இவர் கொடிசியா பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வெள்ளலூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் சிங்காநல்லூர் பஸ் நிலையம வந்தார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் பீளமேடு சென்றார்.பஸ்சில் வைத்து தன்னுடைய செயினை பார்த்தபோது காணவில்லை. 7 பவுன் தாலி செயினை யாரோ திருடி விட்டனர் .இது குறித்து கல்பனா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.