தூங்கும் போது பாம்பு கடித்து மலைவாழ் இளம்பெண் மரணம்..!

கோவை: மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கல்லார் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பார்வதி (வயது 18) இவர் நேற்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் . அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. உடனே அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இரவு பார்வதி இறந்தார். இது குறித்து அவரது தந்தை முருகன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.