கோவையில் மின்சாரம் தாக்கி மிஷின் ஆப்ரேட்டர் பலி ..

கோவை மாவட்டம் ஏ. நாகூர், ஆவலாம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. அவரது மகன் செல்வராஜ் ( வயது 29 )இவர் அன்னூர் பக்கம் செந்தாம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார் .நேற்று வேலை முடிந்து குளித்துவிட்டு துணிகளை துவைத்து ஒயரில் காயப்படும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .சிகிச்சை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவர் தந்தை கனகராஜ் அன்னூர் போலீஸ் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைநடத்தினார்.