சாலையை கடக்க முயன்ற போது பைக் மோதி மூதாட்டி பலி..

.கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள பகவதிபாளையம், இளங்கோ விதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 62) இவர் கிணத்துக்கடவில் உள்ள ஒரு பேக்கரி முன் ரோட்டை கடந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் கண்ணம்மாள் படுகாயம் அடைந்தார் .சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மகன் ராமராஜ் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பைக் ஓட்டி வந்த பிரசாந்த் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.