பைக் மீது லாரி மோதி மெஷின் ஆபரேட்டர் பரிதாப பலி..

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள வண்டி தாவளத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சாஜி வயது 23 தனியார் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவருடன் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும், சித்தூர் விலயோடியை சேர்ந்த மனு ( வயது 25) என்பவரும் பைக்கில் கோவை – பாலக்காடு எல் அன்.டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை மனு ஓட்டினார்.சாஜி பைக்கின் பின்னால் இருந்தார்.கோவை ஏ .ஜி. புதூர் சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி அவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் பின்னால் இருந்த சாஜி படுகாயம் அடைந்தார்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சேலம், எருமபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் சந்திரசேகர் ( வயது 43) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.