தாயாருக்கு போன் செய்து சொல்லி விட்டு காதலனுடன் கல்லூரி மாணவி ஓட்டம்..!

கோவை கோட்டைமேடு சாமியார் புதுவிதியைச் சேர்ந்தவர் ஜெகன் ராஜ். இவரது மகள் ஜெனிதா மேரி ( வயது 19) கோவை சுங்கம் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 9-ந்தேதி தேதி கல்லூரிக்கு சென்ற ஜெனிதா மேரி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மாணவியின் தாயார் கவிதாவுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண் நபர் ஒருவர் தங்கள் மகளை தான் காதலிப்பதாகவும், அவரை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.இதுகுறித்து கவிதா உக்கடம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.