காதல் தோல்வி… வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் டுகானா மகாலிக் (வயது 19) இவர் கே.ஜி. சாவடி பக்கம் உள்ள பிச்சனூர் பகுதியில் ஒரு மில்லில் தங்கி இருந்து கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வருகிறார். இவர் ஒடிசாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மற்றொருவரிடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது . இதை அறிந்த டுகானா மகாலிக் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று பிச்சனூரில் உள்ள ஒரு மாமரத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..