மெட்டல் கம்பெனியில் துணிகர திருட்டு.

கோவை அருகில் உள்ள சின்ன வேடம்பட்டி,அஞ்சுகம் நகரை சேர்ந்தவர்ஆனந்த். இவரது மனைவி சுபா ( வயது 32)அந்த பகுதியில் மெட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் பார்த்தபோது அங்கிருந்த 40 கிலோஎடை கொண்ட இரும்பு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சுபா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.