வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

கோவை செல்வபுரம் ஐ.யூ. டி.பி. காலனி, சத்யா நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்,இவரது மனைவி விஜயகுமாரி (வயது 42) நகை தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க ஆரம், பணம் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து விஜயகுமாரி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..