தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ரூ 30 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்.

கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள வெங்கடரமணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 53)இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரில்” ஆர். ஜே. எக்யூப்மென்ட்ஸ்”என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 26ஆம் தேதி (ஞாயிறு)அன்று தொழில் நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அன்றுதிடீரென்று தீ விபத்து ஏற்பட்டது .இதுகுறித்து கோவை தெற்கு பகுதி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயைணைத்தனர்.இதில் தொழிற்சாலையில் இருந்த 2இருசக்கர வாகனங்கள், மூலப்பொருட்கள், கம்ப்யூட்டர் ,மோட்டார் கம்பரசர்,பிரிண்டர்ஸ் மேஜை, நாற்காலி, பீரோ உட்பட ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேதம் மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும். இது குறித்துஅதன் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் ராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.