பாவாடை தாவணியில் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்த ஜான்வி கபூர்..!

பாரம்பரிய ஆடையான லாவண்டர் பூ நிறத்தில் ரவிக்கையுடன் தாவணி அணிந்து, மிகவும் சிம்பிளான லுக்கில் திருமலை திருப்பதி கோயிலுக்கு வந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்தார்.

தனது ரவிக்கையை மடிசார் போல் இடது பக்கமாக அவர் அணிந்திருந்தது வித்தியாசமாக இருந்தது.

ஜான்வி கபூருடன் வேறு பிரபலங்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு தனது பிறந்தநாளின்போது திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார் ஜான்வி கபூர். அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பதி கோயிலுக்கு வந்த ஜான்வி கபூர் சிறப்பு பிரார்த்தனையும் மேற்கொண்டார்.