ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் அறிவிப்பு ..!

சென்னை : தி.மு.க., அரசை எதிர்த்து, தொடர் போராட்டங்களை ‘ஜாக்டோ – ஜியோ’ அறிவித்துள்ளது.

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கைகள், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம் பெற்றன. தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், தி.மு.க., ஆட்சி வந்ததும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகள், ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்தும் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பரில், வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டை நடத்தி, முதல்வர் ஸ்டாலினை கவுரவப்படுத்தினர். அந்த மாநாட்டிலும் கோரிக்கை குறித்து, முதல்வர் அறிவிக்க மறுத்து விட்டார்.