இன்டிகேட்டர் போடாமல் திரும்பியதால் லாரி மீது பைக் மோதி வாலிபர் சாவு…

கோவை மாவட்டம் காரமடை கெம்மராம் பாளையம், நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நிதிஷ்குமார் ( வயது 24) இவர் நேற்று தோளம்பாளையம்- காரமடை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.புஜங்கனூர் மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற ஒரு லாரி இன்டிகேட்டர் போடாமல் திரும்பியது. இதனால் நிதிஷ்குமார் ஓட்டிச் சென்ற பைக் லாரி மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த நிதிஷ்குமார் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசா நடத்தினார்கள் .இது தொடர்பாக லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.