தீபாவளி போனசை குடித்து செலவழித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை..

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், புது தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மகன் பொன் துரை ( வயது 35) தனியார் நிறுவனத்தில் சி.என்.சி .மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.இவரது நிறுவனத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்த பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் மது குடித்து செலவழித்தாராம்.இதை மனைவி மகேஷ் ( வயது 32) கண்டித்தார்.இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரம் அடைந்த பொன் துரை அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்தும் மனைவி மகேஷ் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.