காதலி பேச மறுத்ததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை..

கோவை சூலூர் பக்கம் உள்ள காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் .அவரது மகன் பிரதீப்( வயது 20) இவர் அதே பகுதி சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார் .இதனால் மனம் உடைந்த பிரதீப் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது அண்ணன் பரத் சூலூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.