முடக்கத்தான் கீரை தோசையின் அற்புத பயன்கள் இதோ..!!

பொதுவாக ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு .இதில் முடக்கத்தான் கீரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் . நம்மை ஒரே இடத்தில் வாத நோயால் முடக்காமல் இந்த கீரை காப்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என்று பெயர் வந்தது .குளிர்காலங்களில் வரும் இடுப்பு வலி மூட்டு வலி உடல் வலி, கை வலி போன்ற அனைத்து வழியையும் இந்த கீரை குணப்படுத்தும் .மேலும் தலை வலி ,மலசிக்கல் ,கரப்பான் ,கிரந்தி ,தோல் நோய்கள் ,மூல நோய் காது வலி ,மாதவிடாய் பிரச்சினைகள் ,பொடுகு தொல்லை போன்ற நோய்களை இந்த கீரையின் மூலம் குணப்படுத்தலாம் .இதை தோசையாக எப்படி வார்க்கலாம் என்று பார்ப்போம்.

தோசை மாவு அரைக்கும் போதே, முடக்கத்தான் கீரையையும் நன்றாக சுத்தம் செய்து, மாவுடன் சேர்த்து, நைஸாக அரைத்து புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

தயாரிக்கப்பட்ட மாவு தோசைக்குத் தயாரானதும், தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். . இந்த தோசை மூலம் கை, கால் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் கீரை தோசையை செய்து சாப்பிட்டால், வலி உடனே பஞ்சாய்ப் பறந்து நம் ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் இந்த முடக்கத்தான் கீரை .