தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.!!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 1994 – 1997 கல்வியாண்டில் பிஎஸ்சி இயற்பியல் பிரிவில் பயின்ற மாணவ மாணவியர்கள் சந்திப்பு நடைபெற்றது.
முன்னாள் மாணவர் டாக்டர். கனக பிரபா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரியில் பயின்று, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து வந்திருந்த சுமார் 25 பேர், குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் கல்லூரி அனுபவங்கள் மற்றும் இப்போது கல்லூரி அடைந்திருக்கும் வளர்ச்சி ஆகியவற்றை சுட்டிகாட்டினர். முன்னாள் மாணவர்களில் சிறந்த தொழில் முனைவோராக விளங்குவோருக்கும், தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த முன்னாள் மாணவர்கள் பலருக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்டது.
இதில், கல்லூரி முதல்வர் பூங்கொடி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் நாராயணசாமி, வில்லியம் ஜேம்ஸ், வெள்ளை பாண்டியன், பாஸ்கரன், அருள்மணி, கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். முன்னதாக இதில் கலந்து கொண்ட பழைய மாணவ மாணவியர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளை சுற்றி பார்த்ததுடன் அங்கு இருந்த அறைகள் மற்றும் லேபுகளுக்கும் சென்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.