சிறுமியை கடத்தி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய காதலன் போக்சோவில் கைது..!

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை இறந்து விட்டதால் தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி, தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க காளியாபுரத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த காளியாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி(வயது21) என்பவர் சிறுமிக்கு அறிமுகம் ஆனார். பின்னர் அவர் சிறுமியை அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்து கொண்டார். இந்த நட்பு காதலாக மாறியது. 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரியவரவே அவர், சிறுமியை கண்டி த்தார். இது தொடர்பாக சிறுமி, வாலிபரிடம் தெரி வித்துள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியேறி கருப்புசாமியுடன் சென்று விட்டார். பின்னர் அவர் சிறுமியை அந்த பகுதியில், உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்க த்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்ப த்திரிக்கு அழைத்து சென்றனர்.டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.இது குறித்து பொள்ளாச்சி அனைத்து பெண்கள்காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்துகருப்பசாமியை கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.