கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த பெண் பல் மருத்துவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ பற்ற கணவர் கைது!!!

கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த பெண் பல் மருத்துவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ பற்ற கணவர் கைது!!!

 

கோவை அம்மன் குளம் பகுதியில் வசித்து வருபவர் இன்பராஜ் என்பவரின் மகள் பிருந்தா (30). தனியார் மருத்துவமனையில பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் மகன் செல்வகுமாரன் (35 ) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. செல்வகுமாரன் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மேனேஜராக பணி புரிந்து வருகிறார். இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களது மகன் சென்னையில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிருந்தா தனது கணவரை தெரிந்து கோவையில் வந்து தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிருந்தா தனது மகனின் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழை பெற்று கோவைக்கு மகனை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய விபரம் அறிந்த அவரது கணவர் செல்வகுமாரன் பலமுறை பிருந்தாவை தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ வருமாறு கேட்டுள்ளார் .ஆனால் பிருந்தா தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரன் நேற்று அதிகாலை பிருந்தாவின் வீட்டிற்கு வந்து கதவை தட்டி உளளார். அப்போது பிருந்தா கதவை திறந்துள்ளார். அப்போது செல்வகுமாரன் தகாத வார்த்தைகள் பேசி பிருந்தாவிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோல் பாட்டிலில் இருந்து பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்தார். இதை பார்த்து பிருந்தா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் சத்தம் போட்டபடியே அங்கிருந்து தப்பி ஓடினார் .காயமடைந்த பிருந்தா தனது உறவினர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பிருந்தா ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் மகன் செல்வகுமாரன் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.