டார்ஜிலிங் சென்ற குடும்பம்: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 41 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை!!!

டார்ஜிலிங் சென்ற குடும்பம்: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 41 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை!!!

கோவை ராமநாதபுரம் சிவராம் நகர் பகுதியை சேர்ந்தவர் மன்மதன் (54). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுராதா(52) தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுராதா வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு சென்று பின்னர் அங்கிருந்து தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் சென்னையிலிருந்து டார்ஜிலிங் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அனுராதா வீட்டில் பணிபுரியும் சுசீலா என்ற பெண் ஃபோன் மூலம் அழைத்து வீட்டின் கதவு உடைந்த நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறார் .இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுராதா அவரது சகோதரருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார் .அவர் அங்கு சென்று பார்த்தார் .இந்நிலையில் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அனுராதா குடும்பத்தோடு மீண்டும் வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்தார் 41 பவுன் தங்க நகைகள் மற்றும் 23 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அனுராதா ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .