தமிழ்நாட்டில் 5 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் 1.67 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் – 102கடத்தல் வாகனங்கள் பறிமுதல். 3,187 பேர் | கைது.டிஜிபி சைலேந்திரபாபு தகவல், கோவைஏப்2 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று காலை 11 மணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தின் பொறுப்பு முதல்வராக பிரகாஷ் என்பவரும், முதல்வராக சுகுமார் என்பவர் இருந்து வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் ...
கோவை : கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது : கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 5,624 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 3,778 மனுக்கள் ...
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்னை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.இதில் 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதனால் இலங்கை அதிபர் கோத்தபய ...
டெல்லி: ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களின் ஒருவரும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகருமான தலீப் சிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தில் இந்திய – ரஷ்யா இடையிலான ...
உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் அதாவது நான்கில் ஒருவர் போர் உள்ளிட்ட மோதல்கள் நடைபெறும் பகுதியில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐநா கூட்டம் ஒன்றில் பேசிய அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் 2ஆம் உலகப்போருக்கு பின் மோதல் நிறைந்த சூழலில் அதிகளவிலான மக்கள் வசிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ...
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஒரு மாதம் கடந்துள்ளது. இதற்கிடையே, ரஷியாவுக்கு எதிராக மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையை கடைபிடித்து வருகிறது. இதன் காரணமாக, ரஷிய ரூபிள்லேயே வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷியா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டம் குறித்து இந்தியா ஆலோசனை மேற்கொண்டு ...
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியா வருகிறார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதல் உயர்மட்ட பயணமாகும். லாவ்ரோவ் ...
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல என்றும், கூட்டாளிகள் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, திடீர் பயணமாக கடந்த 25-ம் திகதி இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ...
வட தமிழ்நாட்டில் எருது விடும் விழாக்களில் பல பரிசுகளை வென்ற வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த சங்கீதா எக்ஸ்பிரஸ் காளை உயிரிழந்தது. வேலூர்: மேல்மொணவூரை சேர்ந்தவர் சகாதேவன். இவர் பல ஆண்டுகளாக காளைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான சங்கீதா எக்ஸ்பிரஸ் என்னும் காளை கடந்த சில ஆண்டுகளாக வட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருது விடும் ...