ஒரே நாளில் 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை மாவட்டம் வால்பாறை கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம் .இவரது மகன் சத்யராஜ் ( வயது 31 ) கூலி தொழிலாளி .இவருக்கு கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி இவரை விட்டு பிரிந்து மைல்கல்லில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சத்யராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து தந்தை செல்வம் வால்பாறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .

இதேபோல பொள்ளாச்சி .கோட்டூர் பக்கம் உள்ள பொங்காளியூர்,மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கார்த்திகேயன்( வயது 30)டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2மகன்கள் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர்.குடிக்க கூடாது என்று மனைவி அறிவுரை கூறியதால் மனமடைந்து அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பிரபா கோட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.