விநாயகர் சிலைக்கு வெளிச்சத்துக்காக பல்பு போடும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..

கோவை :ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீமான் ஜலோ (வயது 30) .இவர் கடந்த 3 ஆண்டுகளாக குனியமுத்தூர் முத்துசாமி உடையார் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . கட்டட வேலை செய்து வருகிறார்கள்.இவரது மகன் பாதல் (வயது 13)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு வெளிச்சத்துக்காக சிறுவன் பாதல் பல்பு போட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.இது குறித்து தந்தை சீமான் ஜலோ குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..