கோவை மில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு : கொலையா..?போலீஸ் விசாரணை..

கோவை சிங்காநல்லூர் நேரு பார்க் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லி
ன் பின்புறம் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவருக்கு 50 வயது இருக்கும். அவரது தலையில் காயம் இருந்தது. அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து சவுரிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ( பொறுப்பு ) நிர்மலா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அவரை யாரோ கடத்தி வந்து கொலை செய்திருப்பார்கள் என்று சந்தேகிக்கபடுகிறது.