கோவையில் பைக் மோதி விவசாயி பரிதாப பலி..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கல்லாபுரம் , ஏழூர் சந்திப்பில் வசிப்பவர் செல்வராஜ் ( வயது 62) விவசாயி .நேற்று இவர் கல்லாபுரம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மகன் ரமேஷ் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரண நடத்தினார். இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த கல்லாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் ( வயது 21) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.