கோவில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி-3 பேர் படுகாயம்..

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள எட்டித் துறை பகுதியில் அருள்மிகு, புத்து மாரியம்மன் கோவில் உள்ளது .நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது .இதனால் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜ் (வயது 50)முருகன் மகன் ஹரி (வயது 13) பிரபு ( வயது 35) நித்திஷ் ( வயது 11) மற்றும் நிர்மல் (வயது 14) ஆகியோர் கோவில் அருகே மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.அப்போது திடீரென கோவிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கோவில் அருகே நின்று கொண்டிருந்த 5 பேரும் இடிபாட்டுக்குள் சிக்கினார்கள் .இதனை கவனித்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து 5பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவலகொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஹரி மற்றும் நடராஜ் ஆகியோர் உயிருடன் மண்ணில் புதைந்த இறந்து விட்டனர். மற்றும் 3 பேரும் படுகாயத்துடன் உயிர் தப்பினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஹரி நடராஜ் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது .மேலும் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள்.