கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம். மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 74) இவர் நேற்று காங்கேயம் பாளையம், மருந்து கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரங்கன் அதே இடத்தில் பலியானார். ...
கோவை பீளமேடு புதூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் ரேணுகாதேவி (வயது 21)இவர் செங்காளியப்பன் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2-ந்தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ரங்கநாதன் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு ...
கோவை சூலூர் அருகே உள்ள ராசி பாளையம் ரெயில்வே கேட் அருகே நேற்று இரவு தண்டவாளத்தை ஒட்டி இளம்பெண்ணும் ,ஒரு வாலிபரும் கட்டிப்பிடித்தபடி பிணமாக கிடந்தனர்.இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதில் பிணமாக கிடந்தவர்கள் சூலூரைச் சேர்ந்த அஜய் ...
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 29)கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஹர்ஷினி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மனைவி ஹர்ஷினி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கார்த்திக் தனது மனைவி மற்றும் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம் கருவூலூரான் வீதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (வயது 44) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதிலிருந்து விடுபடுவதற்காக மது அருந்துவோர் மறுவாழ்வு மையத்தில் 4மாதம் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டுக்கு வந்தார் .வீட்டுக்கு வந்த பிறகு அவரால் ...
கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவின்பேரில், மாநகராட்சிப் பகுதியில் அனுதியின்றி, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட காந்திபுரம் லாஜாபதிராய் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாகைகளை கோவை மத்திய மண்டலத்தின் உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் மற்றும் நகரமைப்பு அலுவலர் ...
கோவை: நகரப் பஸ்களில் மாதம் முழுவதும் விருப்பம் போல பயணிக்க ரூ.1,000 செலுத்தி சலுகை கட்டண அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் கோவை கோட்ட மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அனைத்து நகர பஸ்களிலும் ஒரு மாதம் முழுவதும் எங்கும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கி ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்து விட்டு பேன்சி கடையை கவனித்து வந்தார். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அந்த பகுதியில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்த சேலத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக ...
ஊட்டி: தமிழக மக்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அவர்களின் முதல் விருப்பமாக நீலகிரி மாவட்டம் தான் இருக்கும். இயற்கையின் மொத்த அழகையும் அங்கு கண்டு வியந்து ரசிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுப்பர். அப்படி வருபவர்களின் முதல் விருப்பம் ஊட்டி தாவிரவியல் பூங்கா. அடுத்த இடத்தில் படகு இல்லம் மற்றும் ரோஜா ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் பிரிவு, தோலம்பாளையம் மத்திய சுற்று, தடாகம் காப்புக்காடு, நீலாம்பதி சரகப் பகுதியில், காப்பு காட்டிற்குள், நேற்று வயதான பெண் யானை இறந்து கிடந்தது. இது வனப் பணியாளர்களின் வழக்கமான ரோந்துப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அந்த வனப் பகுதியைத் தணிக்கை செய்தனர். உடல்கூறாய்வு ...













