கோவையில் ஒரே நாளில் 3 மாணவிகள் திடீர் மாயம்..!

கோவை செல்வபுரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு இவரது மகள் சக்தி மகேஸ்வரி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந் தேதி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை .எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து தந்தை பாபு செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதேபோல வெள்ளலூர் எல். ஜி .நகரை சேர்ந்த 17 வயது மாணவி .அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 1-ந்தேதி டெய்லர் கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து தந்தை தேவநாதன் கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதே போல கோவை ரத்தினபுரி, சத்தியவாணி முத்து வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் .இவரது மகள் 14 வயது சிறுமி.அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3-ந்தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை .இது குறித்து தாயார் பிரியா மத்திய பகுதி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.கோவையில் ஒரே நாளில் 3 மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.