லாரி மோதி முதியவர் பரிதாப பலி..

கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம். மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 74) இவர் நேற்று காங்கேயம் பாளையம், மருந்து கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரங்கன் அதே இடத்தில் பலியானார். இது குறித்து அவரது மனைவி வீரம்மாள் சூலூர் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை | கீழ பாளையத்தை சேர்ந்த,லாரி டிரைவர் மகபூப் ஜான் (வயது 60) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.