வேலைக்குச் சென்ற பெண் ஊழியர் திடீர் மாயம்..!

கோவை பீளமேடு புதூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் ரேணுகாதேவி (வயது 21)இவர் செங்காளியப்பன் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2-ந்தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ரங்கநாதன் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து ரேணுகா தேவியை தேடி வருகிறார்