குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்து காவலாளி பலி..!

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் வரதராஜபுரம், திரு.வி.க. வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது43) காவலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அவரது வீட்டில் மாடியில் இருந்து குடிபோதையில் தவறி கீழே விழுந்தார் .இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.